
ஈகை என்பது பிறர் பசி மற்றும் வறுமையை போக்க தான் ஈட்டிய பொருளை, எந்த ஒரு கைமாறும் கருதாமல் மனமுவந்து கொடுப்பதாகும். இத்தகைய உணர்வைப் போற்றும், தியாகத்திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும்.