
இன்று மதுரை பசுமலை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்ததுடன், போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினேன்.
இந்நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், விளையாட்டு திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.