web analytics
CTR Nirmal Kumar pays tribute and offers condolences on the death of senior journalist PSD Purushothaman
மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவருமான PSD புருஷோத்தமன் அவர்களின் மறைவுக்கு CTR நிர்மல் குமார் ஆழ்ந்த இரங்கல்.

மூத்த பத்திரிகையாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான PSD புருஷோத்தமன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

பத்திரிகையாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் அங்கீகாரத்திற்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அயராது பாடுபட்ட அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பத்திரிகையாளர் சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

CTR Nirmal Kumar